ஞாயிறு, 24 ஜூலை, 2022

அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி காட்டுயானை உயிரிழப்பு

மேட்டூர் அருகே அனுமதி இன்றி விளைநிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஆலமரத்துப்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட கூழ் கரடு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னபையன் என்ற புஷ்பநாதன், இவருக்கு சொந்தமான விளை நிலத்தில் பருத்தி சாகுபடி செய்து வருகிறார். இந்த நிலையில் இவர், தோட்டத்திற்கு அருகே காப்புக்காடு இருப்பதால் அவ்வப்போது வனவிலங்குகள் விளை நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது.

image

இதை தடுக்க நிலத்தின் அனுமதி இன்றி மின்வேலி அமைத்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை காப்புக்காட்டில் இருந்து விளை நிலத்துக்குள் வந்த 35 வயது மதிக்கத்தக்க இரட்டை தந்தங்களுடன் கூடிய ஆண் யானை மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

image

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் வனத்துறையினர் மற்றும் சென்னம்பட்டி வனத்துறையினர் மின்வாரியம் மற்றும் வருவாய் துறையினர் ஆகியோர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/143968/Salem-A-wild-elephant-died-after-getting-stuck-in-an-electric-fence-erected-without-permission.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for Read the post

Featured Post

"I Am a Little Teapot" 3D Animated Nursery Rhyme – History, Importance & Benefits

I Am a Little Teapot Introduction "I Am a Little Teapot" is a popular nursery rhyme among young children. Recently, the Simple Kal...