திங்கள், 25 ஜூலை, 2022

செய்யாறு: பஸ் ஏறச்சென்ற பயணிக்கு நேர்ந்த பரிதாபம் - போலீசார் விசாரணை

செய்யாறு பேருந்து நிலையத்தில் பஸ் ஏறச் சென்ற பயணி பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தர பாண்டியன் (53). இவர் தனது கிராமத்தில் இருந்து செய்யாறு பேருந்து நிலையத்துக்கு வந்து சென்னை செல்ல வழித்தடம் 130 பேருந்தில் ஏற முயன்றுள்ளார். அப்போது பேருந்தில் பயணி ஏறுவதை கவனிக்காமல் வேகமாக பேருந்தை ஓட்டுநர் இயக்கியதால் பயணி கால் தவறி கீழேவிழுந்து பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

image

இதுகுறித்து அவரது மனைவி காமாட்சி கொடுத்த புகாரின் பேரில் செய்யாறு காவல் ஆய்வாளர் பாலு, பேருந்தில் சிக்கி இறந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இறந்த சௌந்தர பாண்டியன் உடலை செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக அனுப்பியுள்ளனர். பேருந்து நிலையத்தில் பஸ் ஏறச்சென்ற பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/144020/Police-investigate-on-death-of-man-who-fall-and-died-at-the-back-wheel-of-government-bus-at-Cheyyar.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for Read the post

Featured Post

"I Am a Little Teapot" 3D Animated Nursery Rhyme – History, Importance & Benefits

I Am a Little Teapot Introduction "I Am a Little Teapot" is a popular nursery rhyme among young children. Recently, the Simple Kal...