சனி, 27 ஆகஸ்ட், 2022

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 6 ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்த நிலையில் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர்.

இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ஒரு விசைப்படகையும் அதிலிருந்த ஆறு மீனவர்களையும் கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

image

இதையடுத்து இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள மீனவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/146162/Sri-Lanka-Navy-arrested-6-Rameswaram-fishermen-for-fishing-across-the-border.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for Read the post

Featured Post

"I Am a Little Teapot" 3D Animated Nursery Rhyme – History, Importance & Benefits

I Am a Little Teapot Introduction "I Am a Little Teapot" is a popular nursery rhyme among young children. Recently, the Simple Kal...