Translate

இந்த வலைப்பதிவில் தேடு

சேலையூர் : வாகன சோதனையில் துப்பாக்கி, வெடிகுண்டுடன் 7 முக்கிய குற்றவாளிகள் கைது.!

சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியான சந்தோஷபுரம் பகுதியில் செய்யப்பட்ட வாகன சோதனையில் கஞ்சா பொட்டலம், கத்தி, நாட்டு வெடிகுண்டு மற்றும் துப்பாக்கியுடன் வந்த குற்றவாளிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியான சந்தோஷபுரம் பகுதியில் சமுதாய நலக்கூடம் அருகே சேலையூர் காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனங்களில் அவ்வழியாக வந்த ஏழு பேர் போலீசாரை கண்டவுடன் வாகனங்களை திருப்பி கொண்டு தப்பிச்செல்ல முயற்சித்துள்ளனர். இதனை கண்ட போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

image

பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள், பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் (32), யுவராஜ் (30), திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பாரதி (34), மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த கீரத்திராஜன் (22), கீழப்பாக்கம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (30), விழுப்புரம் பகுதியை சேர்ந்த மணிகன்டன் (33) மற்றும் பெருங்குடி பகுதியை சேர்ந்த நாகராஜ் (27) என்பதும் தெரிய வந்தது.

image

இதையடுத்து அவர்களிடம் சோதனை செய்தபோது பாரதி என்பவரிடம் ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டு ஒன்றும் இருந்தது தெரிந்தது. மேலும் ஹரிபிரசாத் என்பவரிடம் ஒன்றேமுக்கால் கிலோ கஞ்சா மற்றும் யுவராஜ் என்பவரிடம் ஒரு கத்தி இருந்தது தெரிய வந்தது. அந்த பொருட்களை எல்லாம் அவர்களிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

image

இதில் பாரதி என்பவர் மீது கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்கு என 4 வழக்குகள் நிலுவையில் உள்ளதும், ஹரிபிரசாத் மற்றும் யுவராஜ் ஆகியோர் மீது தலா 2 கொலை முயற்சி வழக்கும், 2 சண்டை வழக்குகளும், நாகராஜ் என்பவர் மீது 2 கொலை முயற்சி வழக்குகளும், 4 சண்டை வழக்குகளும் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

image

இந்நிலையில் அவர்கள் ஏழு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/145691/selaiyoor--7-main-criminals-arrested-with-gun-bomb-in-vehicle-search-.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post