சனி, 27 ஆகஸ்ட், 2022

'திமுகவில் இருந்து வெளியேறவில்லை வெளியேற்றப்பட்டேன்' - வைகோ பேச்சு

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வைகோ திமுகவில் இருந்து தான் வெளியேறவில்லை வெளியேற்றப்பட்டேன் என்று கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள மதிமுக பிரமுகரின் இல்ல திருமண விழா நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது துணைவியார் ரேணுகாதேவி அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

image

பின்னர் மேடையில் பேசிய வைகோ, தினமும் பத்திரிக்கை, தொலைக்காட்சி செய்தியை பார்க்கவே முடியவில்லை கணவனை கொலை செய்த மனைவி, மனைவியை கொலை செய்த கணவன் என்ற செய்தி வந்து கொண்டேதான் உள்ளது.

பண்பாடும், ஒழுக்கமும் சிதைந்து கொண்டே போகிறது. தமிழகம் மிக மோசமான நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறது என்று பேசிய அவர், இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் இதே நிலைதான் என்றும் கூறினார்.

மேலும் திமுக குறித்து பேசிய அவர், திமுகவிற்காக நானும் 21 ஆண்டுகள் பாடுபட்டேன். ஆனால் விதியின் விளையாட்டால் நான் திமுகவிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் வெளியேறவில்லை திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டேன் என்று தெரிவித்தார்.

image

தற்பொழுது மீண்டும் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். தமிழகத்தில் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக செய்து வருகிறார். ஒவ்வொரு நாளும் ஒரு சிறந்த அறிவிப்பு வருகிறது. இன்று மூன்று லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்று அறிவித்துள்ளார். மற்றும் அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

நம்மிடையே ஜாதியின் பெயரால் மதத்தின் பெயராலோ சச்சரவுகள் இருக்கக்கூடாது. மதம் என்பது அவரவர் நம்பிக்கை. ஆனால் அது தமிழர்களுடைய பண்பாட்டை சீரழிக்கும் விதமாக இருக்கக் கூடாது.

மேலும் தற்போது இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இது மிகப்பெரிய கேடு விளைவிக்கும் என்று கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/146166/I-did-not-leave-DMK--I-was-expelled---Vaiko-speech.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for Read the post

Featured Post

"I Am a Little Teapot" 3D Animated Nursery Rhyme – History, Importance & Benefits

I Am a Little Teapot Introduction "I Am a Little Teapot" is a popular nursery rhyme among young children. Recently, the Simple Kal...