புதன், 7 செப்டம்பர், 2022

தென்கொரிய நாட்டு பெண்ணை காதலித்து கரம்பிடித்த தமிழக பொறியியல் பட்டதாரி!

தென்கொரியா நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்த தமிழகத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கரம் பிடித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளை குட்டை பகுதியைச் சேர்ந்த பாண்டியன் - செல்வராணி தம்பதியரின் மகன் பிரவீன் குமார். ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்துள்ள இவர், தென்கொரியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

image

இந்நிலையில் இவரும் தென்கொரியா நாட்டைச் சேர்ந்த சேங்வாமுன் என்ற பெண்ணும் 3 ஆண்டுக்கு மேல் காதலித்து வந்துள்ளனர.; இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் வாணியம்பாடி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் தமிழக கலாச்சாரப்படி புரோகிதர் முன்னிலையில் மந்திரங்கள் முழங்க திருமணம் செய்து கொண்டனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/146780/Tamil-Nadu-engineering-graduate-fell-in-love-with-a-South-Korean-girl.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for Read the post

Featured Post

"I Am a Little Teapot" 3D Animated Nursery Rhyme – History, Importance & Benefits

I Am a Little Teapot Introduction "I Am a Little Teapot" is a popular nursery rhyme among young children. Recently, the Simple Kal...