புதன், 7 செப்டம்பர், 2022

சமூக வலைதளங்களில் முதல்வர் குடும்பம் குறித்து அவதூறு – கோவை அதிமுக நிர்வாகி கைது

சமூக வலைதளங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பம் குறித்து அவதூறு கருத்துகளை பதிவு செய்து வந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த மசக்கவுண்டன் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர், அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவர், சமூக வலைதளங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும் அவரது குடும்பம் குறித்தும் அவதூறு கருத்துகளை பரப்பியதாக சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் வந்தது. இதனையடுத்து நேற்று அவர் பணிபுரியும் அலுவலகத்திற்குச் சென்ற போலீசார், சுப்பிரமணியை மாவட்ட சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

image

விசாரணையில் அவதூறு கருத்துகளை பதிவு செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மீது 153யு(1)(ய), 504, 505(2), 67 ஐவு யுஉவ 2000 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சமூகவலைதள அவதூறு கருத்து பதிவிற்காக அதிமுக மாவட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/146783/Slandering-Chief-Minister-s-family-on-social-media-Coimbatore-AIADMK-executive-arrested.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for Read the post

Featured Post

"I Am a Little Teapot" 3D Animated Nursery Rhyme – History, Importance & Benefits

I Am a Little Teapot Introduction "I Am a Little Teapot" is a popular nursery rhyme among young children. Recently, the Simple Kal...