புதன், 13 ஜூலை, 2022

சாமி கும்பிட வந்த சிறுமிக்கு கோயிலுக்குள் பாலியல் தொல்லை... பூசாரிக்கு சிறை

சாமி கும்பிட வந்த ஒன்பது வயது சிறுமியை கோயிலுக்குள் அழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த 32 வயது கோயில் பூசாரி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

தமிழக கேரள எல்லையை இணைக்கும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாறு அருகே வல்லக்கடவு பகுதியில் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முலா பகுதியைச் சேர்ந்த விபின் என்ற 32 வயது நபர் பூசாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஒரு மாதமாக விபின் வல்லக்கடவு பகுதியில் தங்கி அந்தக் கோயில் பூசாரியாக பணியாற்றி வந்தார்.

image

அந்தக் கோயிலுக்கு அதே பகுதியை சேர்ந்த ஒன்பது வயது சிறுமி சாமி தரிசனம் செய்வதற்காக தனியே வந்துள்ளார். சிறுமியை ஏமாற்றி கோயிலினுள் அழைத்த பூசாரி, சிறுமியை பூஜை பொருள்கள் வைக்கும் அறைக்கு கூட்டிச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

உடல் முழுக்க வலியால் துடித்த அந்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதிருக்கிறார். சிறுமியின் பெற்றோர் பூசாரியின் இழி செயல் குறித்து வண்டிப்பெரியாறு காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்கள்.

வண்டிப்பெரியாறு போலீசார் கோயில் பூசாரி விபினை அழைத்து விசாரணை செய்ததில் அவர் தனது தவறை ஒப்புக்கொண்டார். இதையடுத்து கோயில் பூசாரி விபின் மீது வண்டிப்பெரியாறு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து பீருமேடு கிளைச் சிறையில் அடைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/143314/priest-detained-in-pocso-act-for-abusing-9-year-old-girl-at-idukki.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for Read the post

Featured Post

"I Am a Little Teapot" 3D Animated Nursery Rhyme – History, Importance & Benefits

I Am a Little Teapot Introduction "I Am a Little Teapot" is a popular nursery rhyme among young children. Recently, the Simple Kal...